தாய் உயிரிழந்ததை அறியாமல் பிணத்துடன் 4 நாட்கள் வசித்த வந்த மகன்!! திருப்பதியில் பரிதாபம்!!

தாயின் மரணத்தைத் அறியாமல் நான்கு நாட்கள் அவருடைய உடலுடன் வீட்டிலேயே தங்கி இருந்த 10 வயது மகன்.

தாய் உயிரிழந்ததை அறியாமல் பிணத்துடன் 4 நாட்கள் வசித்த வந்த மகன்!! திருப்பதியில் பரிதாபம்!!

தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் ராஜலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய பத்து வயது மகன் சியாம் கிஷோருடன் திருப்பதியில் உள்ள வித்யா நகர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக ராஜலட்சுமி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு அறையில் தூங்கினார். ஆனால் அவர் படுக்கையில் உயிரிழந்து விட்டார்.

ஆனால் அவருடைய 10 வயது மகன் ஷியாம் கிஷோர் தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து அவருடைய உடலுக்கு அருகிலேயே படுத்து வழக்கம்போல் தூங்கினார். மேலும் கடந்த 4 நாட்களாக தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து வீட்டிலிருந்த பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். மேலும் வழக்கம்போல் பள்ளிக்கும் சென்று வந்தான். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து நாற்றம் அடித்த காரணத்தால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார் இதுபற்றி ராஜலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் வந்து பார்த்த போது ராஜலட்சுமி இறந்து போனது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில் பத்து வயது கிஷோர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மாணவன் என்பது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் காரணமாக திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.