லாரி உரிமையாளர் அடித்துக்கொலை...கை,கால்கள் கட்டப்பட்டநிலையில் உடலை ஏரியில் வீசிய கொடூரம்.!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் லாரி உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

லாரி உரிமையாளர் அடித்துக்கொலை...கை,கால்கள் கட்டப்பட்டநிலையில் உடலை ஏரியில் வீசிய கொடூரம்.!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே  உள்ள வறட்டு ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்  ஒருவரின் சடலம் தண்ணீரில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடியை சேர்ந்த ராஜமாணிக்கம்  என்பவரது மகன் சதீஷ்குமார் என்பதும் இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும், பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. இவருக்கு சொந்தமாக லாரி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

அதனைதொடர்ந்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு விசாரணை செய்து வருகின்றனர்.