முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி திருமணம்: மனமுடைந்த கணவர் ரயில் முன் பாய்ந்த அவலம்!

மாமனார் கொடுமையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த வாலிபரை மீட்ட பொதுமக்கள் மீட்டனர்.   

முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி திருமணம்: மனமுடைந்த கணவர் ரயில் முன் பாய்ந்த அவலம்!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டி சேர்ந்த பாலமுருகன் வயது 27. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கள்ளிக்குடியை சேர்ந்த சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ஜாபர் ராஜா முகமது என்பவரது மகளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் இவரது மனைவிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவருடன் திருமணம் நடந்து வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனை மறைத்து முன்னால் கணவருடன் விவாகரத்து செய்யாமல் பாலமுருகன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த பாலமுருகன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தூக்க மாத்திரையை அருந்தி தற்கொலை முயற்சி செய்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  

இந்நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பாலமுருகனை மீட்டு திருமங்கலம் நகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.