தரக்குறைவாகப் பேசியதால் இப்படியா..? தாத்தா, பாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டி எரித்து கொன்ற பேரன்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, கூரை வீட்டை பூட்டி, தாத்தா பாட்டிக்கு தீ வைத்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தரக்குறைவாகப் பேசியதால் இப்படியா..?  தாத்தா, பாட்டியை  வீட்டுக்குள் வைத்து பூட்டி எரித்து கொன்ற பேரன்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி ஊராட்சியில் வசிப்பவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு தற்போது திமுக கட்சியில் உள்ளார். இவருடைய தந்தை காட்டுராஜா (75) தாய் காசியம்மாள் (65) இருவரும் நேற்று கொத்தம்பாடியில் உள்ள பாரதியார் நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இவருடைய மூன்றாவது மகன் குமாரின் மகன் தஷ்வந்த் குமார் இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் தாத்தா பாட்டி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தகர கூரை வீட்டை பூட்டி தீ வைத்ததாக தெரிகிறது.

உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததீன் பேரில் தீயணைப்பு துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் உள்ளனர்.  அவர்களின் உடல் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.  

இதுகுறித்து ஊரக இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தஷ்வந்த் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பொழுது தாத்தா, பாட்டி தன்னை தரக்குறைவாக பேசியதால், வேதனை அடைந்து வீட்டை கொளுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பேரனே தாத்தா, பாட்டியை எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.