கள்ளக்காதலனுடன் உல்லாசம்... இடையூறாக இருந்த  4 வயது மகனை துப்பட்டாவால் கொலை செய்த தாய்

நாகையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த 4 வயது மகனை துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

கள்ளக்காதலனுடன் உல்லாசம்... இடையூறாக இருந்த  4 வயது மகனை துப்பட்டாவால் கொலை செய்த தாய்

நாகையை அடுத்துள்ளது மேல வாஞ்சூர் என்ற பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி அபர்ணா.கடந்த 2014-ல் இவர்களுக்கு கல்யாணமாகி 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

திருமணமான ஒரே வருஷத்தில் 2 பேருக்கும் கிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் உறவினர்கள் சமாதானப்படுத்தி இவர்களை மறுபடியும் ஒன்று சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளனர்.

கார்த்தி சென்னையில் கார் டிங்கரிங் வேலை பார்த்து வருகிறார். இந்த சமயத்தில் அபர்ணாவுக்கு ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

3 வருஷமாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கார்த்தியின் காதுகளுக்கு செல்ல, இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த "கார்த்தி, நீ எக்கேடாவது கெட்டுப்போ.. என் குழந்தையை என்கிட்ட தந்துடு, நல்லபடியா படிக்க வெச்சிக்கிறேன்" என்று கெஞ்சி உள்ளார்.

ஆனால், அபர்ணா மகனை தரவே முடியாது என்று சொல்லி உள்ளார். இப்படியாக கள்ளக் காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார் அபர்ணா.  ஒருநாள் அபர்ணாவும் சுரேஷூம் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதுள்ளான்.. இதனால் எரிச்சல் அடைந்த சுரேஷ், குழந்தையை தள்ளிவிட்டுள்ளார்..

டென்ஷன் அடைந்த அபர்ணா, தன்னுடைய துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை இறுக்கி உள்ளார்.. இதில் துடிதுடித்து குழந்தை இறந்துவிட்டான். இதனால் பதறி போன கள்ளஜோடி சடலத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயன்றுள்ளனர். 

ஆனால் ரகசிய தகவலின் பேரில் போலீசாரால் கையும் களவுமாக அபர்ணாவும் சுரேஷூம் பிடித்துவிட்டனர்.. 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.