பெண்ணை தரதரவென்று இழுத்து சென்ற மர்மநபர்கள்...வைரலாகும் வீடியோ..

செல்போனை பறிப்பதற்காக பெண் என்றும் பாராமல்  ரோட்டில் தரதரவென்று இழுத்து சென்ற மர்மநபர்...

பெண்ணை தரதரவென்று இழுத்து சென்ற மர்மநபர்கள்...வைரலாகும் வீடியோ..

டெல்லியில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து தரதரவென்று இழுத்து சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள சலிமர் பகா பகுதியில்,  சாலையில் நடந்து கொண்டிருந்த பெண்ணிடம் செல்போனை பறித்துக்கொண்டு சென்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் எதிர்பாராத விதமாகப் பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அந்தப்பெண் சுதாரிப்பாய் இருந்ததால் செல்போனை விடாமல் இறுக்கமாய் பிடித்திருந்தார்.

இதில் கோபமடைந்த  மர்மநபர்கள் அந்த பெண்ணை நடு ரோட்டில் சுமார் 200 மீட்டர் வரை தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த சிலர் சமூக வலைதளத்தில் ஷேர் செய்ததால் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து,  செல்போன் பறித்துச் சென்ற மர்மநபர் இருவரையும் கையும் களவுமாக  பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், செல்போனை பறிப்பதற்காக பெண் என்றும் பாராமல்  ரோட்டில் தரதரவென்று இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.