கவனத்தை திசை திருப்பி ஊழியருக்கு நாமம் போட்ட மர்மநபர்...!

ஆவடியில் ஊழியர் ஒருவர் கவனத்தைத் திசைதிருப்பி பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து இருந்த  75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

கவனத்தை திசை திருப்பி ஊழியருக்கு நாமம் போட்ட மர்மநபர்...!

ஆவடி அடுத்த மிட்டனமல்லி, ராகவா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் . ஆவடி, சி.டி.எச் சாலையில் உள்ள கனரா வங்கியில் தனது கணக்கில் இருந்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.

பின்னர் பைக்கில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் பணத்தை வைத்து கொண்டு புறப்பட்ட போது அங்கு வந்த நான்கு மர்ம நபர்களில் ஒருவன் கீழே நான்கு பத்து ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது. அது உங்களுடையது என்றால் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறி கவனத்தைத் திசை திருப்பியுள்ளார்.

அப்போது மகாலிங்கம் பைக்கை நிறுத்திவிட்டு வந்து கீழே கிடந்த பணத்தை எடுத்த போது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

தகவலறிந்த  ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து 4 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.