திருட சென்ற வீட்டில் உயிரை பணயம் வைத்த கொள்ளையன்...நடந்தது என்ன?

திருட சென்ற வீட்டில் உயிரை பணயம் வைத்த கொள்ளையன்...நடந்தது என்ன?

திருப்பூரில் வீட்டில் திருட சென்றபோது உாிமையாளா் வந்ததால் கொள்ளையன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன் பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்த வடிவேலு என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வழக்கம்போல், பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய வடிவேலு, வீட்டில் யாரோ இருப்பதை அறிந்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்  ஒருவா் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை திருடி கொண்டிருப்பதை கண்டறிந்தார்.

இதையும் படிக்க : ஏழைகளின் உயிரோடு விளையாடுவதா? திமுகவை விளாசிய எடப்பாடி!

உடனடியாக, அவனை உள்ளே தள்ளி கதவை தாழிட்டு ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பிடிபட்டதை அறிந்த திருடன் வீட்டிலிருந்த சேலையை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.