சென்னை வியாசர்பாடியில் பரபரப்பு! தலைமை காவலரை மிரட்டிய ரவுடி கைது!!

சென்னை வியாசர்பாடியில் பரபரப்பு! தலைமை காவலரை மிரட்டிய ரவுடி கைது!!

சென்னை வியாசர்பாடியில் சிசிடிவி காட்சிகளை காட்டுமாறு தலைமை காவலரை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

தேசிகானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாறன். இவர் வில்லிவாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி காலை  மாறனின் வீட்டின் வெளியே நின்றிருந்த இரண்டு நபர்கள் மதுபோதையில்  தங்களது செல்போன் தொலைந்து விட்டது என்றும், உங்கள் வீட்டில் சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க : பள்ளி மேலாண்மை கூட்டம்...பெற்றோர்களுக்கு முதலமைச்சா் வேண்டுகோள்!

அதற்கு மாறன், நீங்கள் இருவரும் தற்போது போதையில் இருப்பதால் பிறகு வாருங்கள் என்று கூறியதால், குடிபோதையில் இருந்த இருவரும் மாறனை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு, மிரட்டியும் சென்றுள்ளனர். 

பின்னர் இதுகுறித்து மாறன் அளித்த புகாரின் பேரில், தலைமை காவலரை மிரட்டிய கன்னிகாபுரம் எம் எஸ் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த கபாலி என்ற ரவுயை போலீசார் கைது செய்தனர்.