தாயையே அரிவாளால் வெட்டி தீ வைத்து எரிக்க முயன்ற மகன்... மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்...

வேடசந்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனது தாயென்றும் பாராமல் அரிவாளால் சரமாரியாக வெட்டி தீ வைத்து எரிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயையே அரிவாளால் வெட்டி தீ வைத்து எரிக்க முயன்ற மகன்... மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி  இவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.

தினமும் சுப்பிரமணி வேலைக்கு சென்ற பிறகு, பஞ்சவர்ணமும், மகன் சதீஷ்குமாரும் வீட்டிலேயே இருப்பார்கள். சதீஷ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இதனால் அவ்வப்போது தாய் பஞ்சவர்ணதிடம் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பஞ்சவர்ணம் வீட்டின் அருகாமையில் உள்ள |விவசாய தோட்டத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்த போது,  அங்கு வந்த சதீஷ்குமார் தனது தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்பு அவரை தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளார்.

பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும்  சதீஷ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அங்கிருந்து அவர் எங்கு சென்றார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.