குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை கொன்ற மகன்  

கடலூர் அருகே குடிக்க பணம்தராததால், தந்தையை கொலை செய்த சைக்கோ மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை கொன்ற மகன்   

கடலூர் அருகே குடிக்க பணம்தராததால், தந்தையை கொலை செய்த சைக்கோ மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் அனைகுப்பம் மீனாட்சி நகரில் வசிப்பவர் சுப்பிரமணியன். இவரது மனைவி 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், 3 பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திக் என்ற பட்டதாரி மகன், தந்தையுடன் வசித்து வந்தார். 32 வயதான கார்த்திக், வேலைக்கு எங்கும் செல்லாமல், குடித்து காலத்தை ஓட்டியுள்ளார்.

இந்நிலையில் மது  வாங்க பணம் தர மறுத்ததால், தந்தையை கொடூரமாக தாக்கியதில்  ரத்த வெள்ளத்தில்  சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கார்த்திக்கின் அறையில் சென்று பார்த்தபோது, 100க்கணக்கான காலி மதுபாட்டிகள் அடுக்கி  வைத்து அதன் நடுவே கார்த்தி படுத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்த போலீசார், சைக்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..