தந்தை கழுத்தில் குத்தி கொலை செய்த மகன்... குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்...

எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மது குடிப்பதை கண்டித்த தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது.

தந்தை கழுத்தில் குத்தி கொலை செய்த மகன்... குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்...

சென்னை எம்ஜிஆர் நகர், சூளை பள்ளம், வெங்கட்ராமன் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (48). இவர் சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் (21) என்கின்ற மகன் உள்ளார். பிரகாஷ் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு போதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதன் காரணமாக ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்த பிரகாஷ் எப்பொழுதாவது பெயிண்டிங் வேலைக்கு செல்வதும் உண்டு என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தது தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குடித்துவிட்டு தனது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்பொழுது தனது மகன் போதைக்கு அடிமையானது தண்டு வருத்தப்பட்ட தந்தை செல்வம் பிரகாஷ் கண்டித்துள்ளார். இதில் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது வீட்டிற்குச் சென்று கத்தியை எடுத்து வந்து செல்வத்தின் கழுத்திலேயே சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் தனது தந்தையையே கத்தியால் குத்தி கொலை செய்த பிரகாசை கைது செய்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.