தாயை திட்டிய தந்தையை கத்தியால் சரமாரியாக குத்திய மகன்.!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தாயை, தந்தை திட்டியதால் ஆத்திரமடைந்த மகன், கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயை திட்டிய தந்தையை கத்தியால் சரமாரியாக குத்திய மகன்.!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி மீனா. இந்த தம்பதிக்கு சங்கிலி முருகன் என்ற மகன் உள்ளார்.

கொத்தனார் வேலை செய்து வரும் தந்தை தர்மராஜ் தினமும்  மதுகுடித்து விட்டு , மனைவியிடம் பணம் கேட்டு சண்டை போட்டு வருவதாக தெரிகிறது. அதுபோல் சம்பவதன்றும் குடித்துவிட்டு மனைவியிடன் சண்டை போட்டுள்ளார்.  

இதனால் ஆத்திரமடைந்த மகன் சங்கிலி முருகன் அருகில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்து மற்றும் முதுகில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும் ஆண்டிபட்டி போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.