கணவனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மனைவி: ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சிக்கிய கள்ளகாதலன்...

கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்று ரசாயனம் ஊற்றி ஆதாரங்களை அழிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கணவனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மனைவி: ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சிக்கிய கள்ளகாதலன்...

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் ராகேஷ் 30வயதான இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார்.இந்த நிலையில் ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. பின்னர் தன் உல்லாசத்துக்கு தடையாக இருக்கும் கனவன் ராகேஷை கொலை செய்ய திட்டமிட்ட ராதா, இதற்கு  கள்ளகாதலன் சுபாஷ் உதவியுடன் பக்கவாக திட்டம் தீட்டினார்.

ராதா தனது கணவன் ராகேஷை கொலை செய்வதற்கு தனது தங்கை கிருஷ்ணா மற்றும் தங்கை கணவரை அழைத்துக்கொண்டார். கள்ளக்காதலன் சுபாஷ், ராதா, கிருஷ்ணா உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஷை அடித்துக் கொலை செய்து, தடயங்களை அழிக்க விரும்பிய ராதா மற்றும் சுபாஷ் ஆகியோர் , இறந்த ராகேஷ் உடலை தடயமே இல்லாமல் அழிப்பதற்காக உடலை பல துண்டுகளாக வெட்டினார்கள்.

பின்னர், சுபாஷும் ராதாவும் ரசாயனத்தை பயன்படுத்தி பிணத்தை கரைக்க முயன்றனர். ஆனால் ரசாயனங்கள் பயன்படுத்தியாதால் வெடித்து தீப்பற்றியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் என்ன வெடித்து தீ வருகிறது என காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த வீட்டின் உள்ளே சிதறி கிடந்த ஒரு சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் உடலை மொத்தமாக சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கிடந்த சடலம் ராதாவின் கணவர் சிக்கந்தர்பூரைச் சேர்ந்த ராகேஷ் என்பது தெரியவந்தது.

இறந்த ராகேஷ் பீகாரில் தடை செய்யப்பட்ட மதுவையும் சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்தார். இதனால் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருந்தார். இதன் காரணமாக, ராகேஷ் பெரும்பாலும் அங்கும் இங்குமாக இரகசியமாக வாழ்ந்து வந்தார். இந்த நேரத்தில், ராகேஷின் கூட்டாளியான சுபாஷ் தான் ராகேஷின் மனைவியை கவனித்து வந்தார், சிறிது காலம் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

 அதன்பிறகு, ராதா, அவளது காதலனுடன் சேர்ந்து, ராகேஷை கொலை செய்ய முடிவு செய்ததாகக் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.அதற்கு ராதாவின் சகோதரியும் அவரது கணவனும் கூட்டு சேர்ந்தார்கள். ராதா அண்மையில் ராகேஷை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் சுபாஷின் உதவியுடன் அவரைக் கொன்றுள்ளார். துண்டுதுண்டாக வெட்டி உடலை ரசாயனம் ஊற்றி அழிக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெடிசத்தம் காரணமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.