விஷமருந்துவது போல் கணவரை விளையாட்டுக்கு மிரட்டிய மனைவி... நிஜத்தில் பலியான சோகம்!! நடந்தது என்ன?

கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் விளையாட்டாக செய்த சம்பவம் கடைசியில் பெரும் விபரீதத்தில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷமருந்துவது போல் கணவரை விளையாட்டுக்கு மிரட்டிய மனைவி... நிஜத்தில் பலியான சோகம்!!  நடந்தது என்ன?

கேரளா, கோட்டயம் அருகே ஆசாரி பரம்பு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ்.  இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீலஷ்மி என்ற பெண்ணை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். அவினாஷ் துபையில் பணிபுரிந்து வருவதால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அவினாஷ் வீட்டிற்கு வந்த நிலையில், ஸ்ரீலஷ்மி ஸ்ரீலஷ்மி கருவுற்றார். இதனால், அவினாஷ் துபாய்க்கு போக விரும்பவில்லை.. மனைவி கூட இருக்க விரும்பியுள்ளார். ஆனால், இது ஸ்ரீலஷ்மிக்கு பிடிக்கவில்லை.. நிறைய கடன் இருக்கிறது... குழந்தை பிறந்தால் நிறைய சிலவு இருக்கும் என கூறியுள்ளார்..

நீங்கள் துபாய்க்கு செல்லுங்கள், குழந்தை பிறக்கும் முன் லீவ் கேட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அவனாஷுக்கு துபாய்க்கு செல்ல விருப்பம் இல்லை. கொரோனா காரணமாக தனக்கு 3 மாதம் லீவ் என்று மனைவிடம் கூறியுள்ளார். இதை ஸ்ரீலஷ்மி நம்பியுள்ளார். பின்னர், கணவருக்கு துபாய் செல்ல விருப்பமில்லாமல் பொய் சொன்னது தெரியவந்தது. 

இதனால், கோபம் அடைந்த ஸ்ரீலஷ்மி, கையில் விஷ பாட்டிலை வைத்துக்கொண்டு நீங்கள் துபாய் செல்ல வேண்டும் என்று மிரட்டி உள்ளார். அதோடு நிறுத்தி கொள்ளாமல் விஷத்தை வாயில் ஊற்றி கணவரை Prank செய்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன அவினாஷ் நான் கண்டிப்பாக துபாய் செய்கிறேன் என்று கூறியுள்ளார். 

இதற்கு ஸ்ரீலஷ்மி, என்னோட தலையில் அடித்து சத்தியம் பண்ணுங்க என்று கூறியுள்ளார். ஸ்ரீலஷ்மி வாயில் விஷம் இருப்பதை மறந்த அவினாஷ், மனைவியின் தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார். சத்தியம் செய்து வேகத்தில் ஸ்ரீலஷ்மி வாயில் இருந்த விஷத்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக மருத்துவமைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரீலஷ்மி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அவினாஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.