ரூ.28 லட்சம் வரை சீட்டு மோசடி.. கைதான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு

28 லட்சம் ரூபாய் வரை சீட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரூ.28 லட்சம்  வரை சீட்டு மோசடி.. கைதான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு

சென்னை பிராட்வே பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராணி. இவர் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர்  வள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்த நந்தகுமாரிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். இவரைப் போன்று 140 பேர், 28 லட்சம் ரூபாய் வரை நந்தகுமார் தம்பதியிடம் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்ட போது சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை தருவதாக நந்தகுமார்  கூறியுள்ளார். ஆனால் கூறியவாறு பணத்தை திருப்பித் தராததால்   பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இதனிடையே  தலைமறைவாக இருந்த சாந்தியை கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.