சொகுசு பேருந்தில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் கொள்ளை!

சொகுசு பேருந்தில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் கொள்ளை!

கிருஷ்ணகிரி அருகே சொகுசு பேருந்தில் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவர் குடும்பத்துடன் நேற்று  பெங்களுரில் இருந்து கோயம்புத்தூருக்கு  தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார். இந்த நிலையில், பேருந்து கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள தனியார் உணவகத்தில்  உணவுக்காக நிறுத்தப்பட்டது.

அப்போது ஆர்த்தி சாப்பிடச் சென்ற நிலையில், அவரது பையில் இருந்த 4 சவரன் தங்க நகை, 8 கிராம் வைர நகை ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது பைகள் திறந்திருப்பதையும் அதில் நகைகள் இல்லாததையும் கண்ட ஆர்த்தி, இது குறித்து கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.