டீ குடித்து விட்டு பணம் தராமல் மாற்றுத்திறனாளியை தாக்கிய போதை ஆசாமிகள்!!

டீக்கடையில் டீ குடித்து விட்டு பணம் தராமல் கடை உரிமையாளரை தாக்கிய இரு நபா்கள் போலீசாரால் கைது.

டீ குடித்து விட்டு பணம் தராமல் மாற்றுத்திறனாளியை தாக்கிய போதை ஆசாமிகள்!!

சென்னை மாதவரம் பகுதியில் டீக்கடையில் டீ குடித்து விட்டு பணம் தராமல் கடை உரிமையாளரை தாக்கிய இரு நபா்களை காவல்துறையினா்  கைது செய்தனா்.  

மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த  மாற்றுத்திறனாளியான ராஜ்குமார், டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் குடி போதையில் கடைக்கு வந்த இருவர், டீ குடித்துவிட்டு பணம் தராமல், கணவன் மனைவி  இருவரையும் தாக்கி விட்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ககொண்டனா். விசாரணையில்  அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மற்றும் லாரி டிரைவர் சரவணன்  என்பது தொியவந்தது. இதனையெடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.