திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் பறிமுதல்...!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் பறிமுதல்...!

திருச்சி விமான நிலையத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக  மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலிண்டோ ஏர்லைன்ஸ்  பயணிகள்  மற்றும்  அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தான் எடுத்த வந்த கைப்பையில் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 170 எண்கள் கொண்ட 100 அமெரிக்க டாலர் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர்களின் இந்திய மதிப்பு 13.83 இலட்சம் ரூபாய் ஆகும். இதனையடுத்து, அந்த பயணியிடம் இதய தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க     | இனி சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் இருக்காது...காரணம் இதோ!