வாலிபர் வெட்டிக்கொலை....உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீச்சு..

மதுரை வாடிப்பட்டி அருகே  வாலிபரை வெட்டிகொலை செய்து, உடலில் கல்லைகட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலிபர் வெட்டிக்கொலை....உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீச்சு..

மதுரைமாவட்டம் வாடிப்பட்டி அருகே கரட்டுபட்டியைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி. 24 வயதான இவர் தீபாவளியன்று வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அவரை குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் தேடி வந்தனர். இந்நிலையில்  ஊருக்கு  அருகேயுள்ள விவசாய கிணற்றில் கோட்டைசாமி  கழுத்தில் வெட்டுகாயங்களுடன் உடலில் கயிறு கட்டபட்ட நிலையில் சடலமாக மிதந்தார்.

தகவலறிந்த போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியோடு வாலிபரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மர்மநபர்கள் கோட்டைசாமியை வெட்டி கொலை செய்து கல்லை கட்டி  கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.