"விராலிமலை வைகாசி தேர்த்திருவிழா".. கூட்டத்தில் கைவரிசையை காட்டிய இளம்பெண்.. 25 சவரன் நகை திருட்டு!!

விராலிமலை வைகாசி தேர்த்திருவிழாவின் போது 8 பேரிடம் 25 சவரன் நகை கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

"விராலிமலை வைகாசி தேர்த்திருவிழா".. கூட்டத்தில் கைவரிசையை காட்டிய இளம்பெண்.. 25 சவரன் நகை திருட்டு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறப்பு ஆலயங்களில் ஒன்றாக விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திகழ்கிறது.

இந்நிலையில், நேற்றைய முன் தினம் விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆலயத்தின் வைகாசி தேர் திருவிழா நடைபெற்றது. கடந்த ஜூன் 4ஆம் தேதி தொடங்கிய வைகாசி திருவிழாவானது நேற்று இரவு தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. 

இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த திருவிழா நடைபெற்று கொண்டிருந்த போது கூட நெரிசலை பயன்படுத்தி கொண்ட பெண் ஒருவர், 8 பேரிடம் 25 சவரன் நகை திருடியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேலத்தை சேர்ந்த 30 வயது மதிப்பு தக்க துளசி என்கிற இளம்பெண் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது வரை அந்தப் பெண்ணிடம் இருந்து எந்த ஒரு நகையும் கைப்பற்றப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.