குடும்ப தகராறில் மனைவி கொடூரமாக வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குடும்ப தகராறில் மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறில் மனைவி கொடூரமாக வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குடும்ப தகராறில் மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்தவர்கள் மாரியப்பன் - ரம்யா தம்பதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மனைவி ரம்யா சிவகிரி அருகேயுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்,  மாரியப்பன் ரம்யாவை மீண்டும் அழைத்து வர சென்ற போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் அருகில் இருந்த அரிவாளால் ரம்யாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.