பல நாட்கள் பூட்டப்பட்டு கிடந்த வீடு:  திறந்து பார்த்த காவலர்களுக்கு அதிர்ச்சி!!

பல நாட்கள் பூட்டப்பட்டு கிடந்த வீடு:  திறந்து பார்த்த காவலர்களுக்கு அதிர்ச்சி!!

தென்காசியில் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தலைமறைவான கணவனை, தகவல் தெரிந்த 12 மணி நேரத்தில் கைது செய்து அசத்திய காவல்துறைக்கு மக்கள் பாராட்டு.

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட நடுமாதாங்கோவில் தெருவில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வாடகைக்கு சந்திரன் மற்றும் அவரது மனைவி சித்ரா குடியிருந்து வந்துள்ளனர் . இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாக இந்த வீடு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. பின்னர் 22ம் தேதி சந்திரன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சந்திரனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் கட்டிலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு, உடல் அழுகிய நிலையில் சித்ரா கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  

கொலை செய்யப்பட்டு இறந்த சித்ராவின் உடலை தென்காசி போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, விசாரித்தபொழுது, மனைவி சித்ராவை  கணவன் சந்திரன் தான் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.  மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தலைமறைவான கணவன் சந்திரனை பிடிக்க தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஒரு தனிப்படை தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலையாளி சந்திரனை கைது செய்தனர். 

கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த 12 மணி நேரத்திற்குள் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவன் சந்திரனை கைது செய்து அசத்திய தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க || ”பாலன் தன் அம்மா பெயரையும் சேர்ந்து கொண்டு வசந்தா பாலனாவேன்”- இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு!