பாலியல் தொல்லை செய்த விசிக பிரமுகர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு...

இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த விசிக பிரமுகர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை செய்த விசிக பிரமுகர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு...

தென்காசி | கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் காசிசிவகுருநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், அரிநாயகிபுரம் அருகே உள்ள கே.எம்.அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஜாதி ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அந்த பெண் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது சேர்ந்தமரம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள காசிசிவகுருநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத் தெரிந்து கொண்ட சிவகுருநாதன் தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் சூழலில், போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இளம்பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தகாத உறவில் ஈடுபட்ட இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த உறவினர்கள்...