மாமியாரை அடித்து துரத்திய மருமகள்... சொத்துக்காக நடந்த கொடூரம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு சொத்தையும் அபகரிக்க முயன்றதாக மாமியார் மீது மருமகள் புகார் அளித்திருக்கிறார்.

மாமியாரை அடித்து  துரத்திய மருமகள்...  சொத்துக்காக நடந்த கொடூரம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் உஷா. இவர்களின் மூத்த மகன் சதீசுக்கு என்பவருக்கு மாஷா என்பவருடன் திருமணம் நடந்து இருவரும் குவைத்தில் வசித்து வந்தனர். இருவருக்கும் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக சொல்லாமல் கொள்ளாமல் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் மருமகள் மாஷா. 

மனைவியை பிரிந்த சதீஷ், தனது தாய் உஷாவிடம் தெரிவித்து மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு காத்திருந்தார். உஷா எவ்வளவோ முறை சென்று பார்த்தும் மாஷா மனம் மாறாத நிலையில் 8 மாதங்களுக்கு முன்பு குவைத்திலேயே சதீஷ்  இறந்து போனார் . 

மேலும் படிக்க | இளமையாக இருக்க நரமாமிசம்... 56 துண்டுகளாக வெட்டிய பயங்கரம்...

சொத்துக்களை விற்று தீர்த்ததாக மாமியார் புகார்:

தனது மகனின் மரணத்தினால் அதிர்ச்சியடைந்த உஷா மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார். அதுவரை தாய் வீட்டில் தங்கியிருந்த மாஷா, கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார். அப்போது முதல் கணவரின் வீட்டை உரிமையாக்கிக் கொள்வதற்கு முடிவெடுத்தார். 

மேலும் படிக்க | கேரளாவில் ‘நரபலி’ ... இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த பயங்கரம்...

மாமியாரை வெளியே துரத்தி விட்டு, தாய் தந்தையை வீட்டுக்குள் குடியேற்றிக் கொண்டார். இது குறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் மாஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உஷாவை மீண்டும் வீட்டில் குடியேற்றினர். அப்போது ஒரு போதும் மாமியாரை வீட்டில் அனுமதிக்க முடியாது எனக் கூறி மாஷா தகராறில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க | #BREAKING | உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு... தற்கொலை முயற்சியால் பரபரப்பு....

சொத்துப் பிரச்சினையால் வீதிக்கு வந்த குடும்பம்:

போலீசாரின் உதவியுடன் வீட்டுக்கு சென்ற உஷா, ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை மாயமாகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதால் இருவரிடையே மீண்டும் பிரச்சனை எழுந்தது.
இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததையடுத்து, அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றி பூட்டு போட்டனர். சொந்த வீடு, சொத்துக்கள் இருந்தும் உஷா, தற்போது அநாதையாக நிற்கும் சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | மசாஜ் செண்டர் ஊழியர்களுக்கு பலத்த ‘மசாஜ்’ கொடுத்த சம்பவம்...