"திருச்சியில் போலி மதுபானமா?": அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!

"திருச்சியில் போலி மதுபானமா?": அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!

திருச்சியில், போலி மதுபானம் விற்கப்படுவது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடையில், வாடிக்கையாளர் ஒருவர் மது டின் பீர் பாட்டில் வாங்கியுள்ளார்.

அந்த டின் பீர் பாட்டிலின்  ஸ்டிக்கரை அகற்றினால், உள்ளே வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதைக்கண்ட வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியாகியுள்ளது. 

ஒரு ஸ்டிக்கரில் தமிழ்நாடு மட்டும் விற்பனை என்று உள்ளது. மற்றொன்றில் டெல்லிக்கு மட்டும் விற்பனை என்று அச்சிடப்பட்டுள்ளது. இது குறித்து மது பிரியர்கள், டாஸ்மார்க் கடையின் விற்பனையாளரிடம் கேட்ட போது, சரியான பதில் கூறாமல் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்கள்.

சமீப காலமாக சில இடங்களில், போலி மது புழக்கத்தில் இருந்து  வரும் நிலையில், தற்போது இது போல் ஒரு சம்பவம் நடைபெற்றது மதுபிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: "கலெக்டரிடம் சென்று மின் இணைப்பு கேளுங்கள், இல்லையெனில் ரூ 10 லட்சம் கொடுங்கள்": மின் ஊழியர் சர்ச்சை பேச்சு!