வற்புறுத்திய தாய்…. தற்கொலை செய்துகொண்ட மகள்… பகீர் பின்னணி

வற்புறுத்திய தாய்…. தற்கொலை செய்துகொண்ட மகள்… பகீர் பின்னணி

மதுரையில் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பாண்டிகோவில் அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரின் மகள் அபிநயா. இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவியின் தாய்மாமனுக்கு அவரை திருமணம் நடத்தி வைக்க அவரது தாயார் முடிவெடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் காவல்துறையினருக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். எனினும் தாயாரின் நடவடிக்கையால் மிகவும் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.