மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்… அதிர்ச்சி வீடியோ வெளியீடு  

ஆந்திராவில், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்… அதிர்ச்சி வீடியோ வெளியீடு   

ஆந்திராவில், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த ஆத்மகூரை சேர்ந்தவர்கள் பென்சலையா-கொண்டம்மா தம்பதியர். பென்சலையா  மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விரக்தி  அடைந்த மனைவி கொண்டம்மா, தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை தடுக்க வேண்டிய கணவன், நான் தடுக்க மாட்டோன், நீ தூக்கு மாட்டிக் கொள் என்று கூறி, மனைவி துடிதுடித்து சாகும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். பெண்ணின் தற்கொலை சம்பவம் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மனைவியின் மரணத்தை, கணவன் வீடியோ எடுத்து  ரசித்தது தெரியவந்தது. இதனையடுத்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.