சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த வாலிபர் - பட்டப்பகலில் நடந்த கொடுமை!

பட்டப்பகளில் ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொன்று ,பிணத்தை சாலையில் வீசிவிட்டு சென்ற நபரை போலீஸ் தேடி வருகிறது.

சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த வாலிபர் - பட்டப்பகலில் நடந்த கொடுமை!

பட்டப்பகளில் ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொன்று ,பிணத்தை சாலையில் வீசிவிட்டு சென்ற நபரை போலீஸ் தேடி வருகிறது.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மேற்கு கல்யாணின் காந்தாரி பகுதியில் லட்சுமி மோஹிட் என்ற பெண் தனது கணவரோடு வசித்து வந்தார்.  அவர் அப்ப்குதியில் உள்ள வீடுகளில் வீட்டு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவருக்கும் அந்த பெண்ணுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வருவது வழக்கமான ஒன்று. 

இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் அங்குள்ள சாலையில் பட்ட பகலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ அந்த பெண்ணை பின் தொடர்ந்து வருவதாக அவர் சந்தேகப்பட்டு திரும்பி பார்ப்பதற்குள் அந்த வாலிபர் அந்த பெண்ணின் முகத்தினை மூடினார். பிறகு தான் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணை பலமுறை குத்தி கொலை செய்து விட்டு ஓடி விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பெண் கத்தியால் குத்தப்பட்டதால் உயிரிழந்தார் என அறிக்கை வந்ததால், போலீசார் அப்பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்.