வீட்டிற்கு விளையாட வந்த சிறுமியை பலாத்காரம் செய்து 2 மாதம் கர்ப்பமாக்கிய கொடூரன் கைது...

திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முனுசாமி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

வீட்டிற்கு விளையாட வந்த சிறுமியை பலாத்காரம் செய்து 2 மாதம் கர்ப்பமாக்கிய கொடூரன் கைது...

திருவள்ளூரை அடுத்த நயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (45) இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே 9 ஆம் வகுப்பு மாணவி  வசித்து வருகிறார் அந்த சிறுமி முனுசாமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரது பிள்ளைகளுடன் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை கடந்த சில தினங்களாக அச்சத்துடன் இருப்பதை கவனித்த பெற்றோர்கள் மருத்துவமனை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்த போது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது முனுசாமி தன்னை வன்கொடுமை செய்ததாகவும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர் இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.