டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முடியாததால்,  சிசிடிவி கேமராக்களை திருடிய திருடர்கள்!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முடியாததால்,  சிசிடிவி கேமராக்களை திருடிய திருடர்கள்!

திருவண்ணாமலையில் மர்ம நபர்கள் 5 பேர் டாஸ்மாக் கடையில் பணமும், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை திருடிச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமம் புறவழி சாலையில் 3 டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் கடையை சாத்திக் கொண்டு சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 5 ஆயிரம் ரூபாயை பணத்தை திருடி சென்றுள்ளனர்.

மேலும் அருகில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தபோது பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். 

மறுநாள், கடையில் திருட்டு நடந்ததை அறிந்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடத்திற்குச் சென்று முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க: மதுவுக்கு அடிமையாகி சிறுமியை தெருவில் தவிக்க விட்ட பெற்றோர்!