சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: தலைநகரில் பயங்கரம்!

சென்னையில் சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: தலைநகரில் பயங்கரம்!

சென்னையில் சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புரசைவாக்கம் சூளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா. இவர் கோயில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக  சாலையில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியிருந்தது. அப்போது சைக்கிளில் கடைக்கு சென்ற கிருஷ்ணய்யா தேங்கிய நீரில் கசிந்த மின்சாரம் தாக்கி  சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

இதனையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவரது உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மின்கசிவு தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்