வங்கியில் திடீர் தீ விபத்து...! தளவாட பொருட்கள் எரிந்து சேதம்...!

வங்கியில் திடீர் தீ விபத்து...!  தளவாட பொருட்கள் எரிந்து சேதம்...!

சென்னை மயிலாப்பூர், சாந்தோம் கச்சேரி சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை உள்ளது.தரைதளத்தில் வங்கியும், முதல் தளத்தில் இரண்டு குடும்பத்தினரும் வசிக்கின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வங்கியில் இருந்து அபாய மணி ஒலித்துள்ளது.

இதைக்கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 25 தீயணைப்பு வீரர்கள், வங்கி கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக கம்ப்யூட்டர் எரிந்து தீப்பிடிக்க தொடங்கியது தெரியவந்தது.

இந்த விபத்தில் மரத்தளவாட பொருட்கள், ஏசி இயந்திரம், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிக்க : ’கேட்’ தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு...!