லாரி மீது வேன் மோதி ஒரு பெண் பலி...

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் லாரி மீது வேன் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பலி 18 பேர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாரி மீது வேன் மோதி ஒரு பெண் பலி...

மதுரை | மடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த அமுதா, ராணி, கோமதி, உள்ளிட்ட 19 பேர் மகேந்திரா வேனில் மதுரையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்றனர்.

அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் விஜய கோபாலபுரம் என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மகேந்திரா வேன் மோதியது விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயமதி என்ற பெண் ஒருவர் பலியானார்.

மேலும், வேனில் பயணித்த 18 பேர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து குறித்து பாடலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தலைநகரில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்... நட்பில் கூட பாதுகாப்பு இல்லாத அவலம்...