மண்சரிவால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து...!

மண்சரிவால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து...!

குன்னூரில் ராஜாஜி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்புச்சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. 

குன்னூரில் ராஜாஜி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்புச் சுவர் இடிந்து  வீட்டின் மீது விழுந்தது. வீட்டிற்குள் இருந்த குழந்தை மற்றும் மூவரையும் தீயனைப்புத் துறையினர் விரைவாக செயல்பட்டு மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து அப்பகுதியில் மண்சரிவு ஏறப்பட்ட வீடுகளில் மீட்பு பணியை துரிதப்படுத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : மழை நீர் தேங்குவதற்கு நிரந்தர தீர்வு காண ஆலோசனை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!