தேயிலை தோட்டத்தில் ஜாலியாக வலம் வரும் யானை...

உதகை மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்டத்தில் வலம் வரும் யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் ஜாலியாக வலம் வரும் யானை...

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் காபி பழம் விளைச்சல் துவங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு வரும் யானைகளில் சில அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன.

மேலும் படிக்க | மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் குட்டிகளை கூட்டத்துடன் சேர்ப்போம் - தமிழ்நாடு அரசு

இந்நிலையில்,  வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று குஞ்சபானை பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டம் வழியாக முள்ளூர் கிராமப் பகுதிக்கு வந்ததுடன் திரும்பி வனப் பகுதிக்குச் செல்லாமல் தேயிலைத் தோட்டத்திற்குள் உலவி வருகிறது.

மேலும்,  பசுந்தேயிலை பறிக்க  தோட்டத்திற்கு வந்த தொழிலாளா்கள் யானை நிற்பதைக் கண்டு அச்சமடைந்து, பணிக்குச் செல்லாமல் திரும்பினா். தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் படிக்க | காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானையால் பதற்றம்...