மீண்டும் பாகுபலி நடமாட்டம்! 

மீண்டும் பாகுபலி நடமாட்டம்! 

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஊட்டி சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற காட்டு யானை பாகுபலியை பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. நீண்ட தந்தங்கள் மிகப்பெரிய உருவமாக காணப்பட்ட அந்த யானையை உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

காட்டுயானை பாகுபலி இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில் அந்த யானையை பிடித்து சென்று அடர் வனத்தில் விட விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அந்த யானைக்கு திடீரென வாயில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த யானையை வன கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானையை பிடித்து செல்ல முயன்ற நிலையில் யானை சிக்கவில்லை. மேலும் யானைக்கு தானகவே காயம் சரியாகி வருவதாக கூறிய வன கால்நடை மருத்துவர்கள் இந்த யானையை பிடிக்க வேண்டாம் என அறிக்கை அளித்தனர்.

அதே சமயத்தில் அந்த சம்பவத்திற்கு பிறகு காட்டுயானை பாகுபலி தனது வழக்கமான வலசை பாதையில் இருந்து விலகி அடர் வனத்திற்குள்ளும் சென்றது. இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில் விவசாய தோட்டங்களுக்கு வராமல் இருந்த யானை பாகுபலி தற்போது மீண்டும் நுழைய ஆரம்பித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஊட்டி ரோடு கல்லார் சாலையில் கம்பிரமாக நடந்து சென்று காட்டிற்குள் சென்றது. நீண்ட இடைவேளைக்கு பின் பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் இருப்பதை உறுதி செய்துள்ள வனத்துறையினர் அந்த யானையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பாகுபலி யானையை கண்ட உடன் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிக்க:பெருங்களத்தூரில் பரபரப்பு: பெண்ணுக்கு கத்திகுத்து மர்ம நபர் தப்பியோட்டம்!