கோவை : வீட்டில் திடீரென பற்றி எரிந்த தீ....!

கோவை : வீட்டில் திடீரென பற்றி எரிந்த தீ....!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் ஒன்றாவது வீதி பகுதியை சேர்ந்தவர் துளசி (65). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் துளசி தனது வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். 

பின்னர் மதியம் 12 மணியளவில் வீட்டிலிருந்து திடீரென புகை வெளியேறி உள்ளது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிக்கு செல்லும் சாலை குறுகிய சாலை என்பதால் மக்கள் உதவியுடன் வீட்டில் பற்றிய தீயை அனைக்கும் பணி நடைபெற்றது.

இதையும் படிக்க : அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்...! ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்...!