கோடை விடுமுறைக்கு வைகை அணை பூங்காவில் குமியும் குடும்பங்கள்!!!!

கோடை விடுமுறைக்கு  வைகை அணை பூங்காவில் குமியும் குடும்பங்கள்!!!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை - சிபிஐ (எம்) வலியுறுத்தல்

பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

பூங்காவில் புல்வெளிகளில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர். அதிகமான மக்கள் கூட்டம் இருந்ததால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததாக கூறிய சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.