சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்...

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்...

திருநெல்வேலி | தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செபஸ்தியாள் என்ற ஜெயா தலைமை தாங்கினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில்,

  • சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்

  • காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும்

  • வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க | டெட் தேர்வு அநீதியை எதிர்த்து போராட்டம்!!! நள்ளிரவில் கைது செய்த போலிஸார்!! கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி!!