கூட்ட நெரிசலால் பேருந்தில் பெண்ணை தாக்கிய ஆண் பயணி...

பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண் பயணி ஒருவரை, ஆண் பயணி தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்ட நெரிசலால் பேருந்தில் பெண்ணை தாக்கிய ஆண் பயணி...

சிவகங்கை | சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வாரம் முதல் நாளான இன்று கூடுதலாக மக்கள் வருகின்றனர். குறிப்பாக பெண்கள் வந்து செல்கின்றனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் மக்கள் வந்து செல்ல போதிய  பேருந்து வசதி நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்து வருகின்றது.

மாவட்ட நிர்வாகம் மக்களின் அத்தியாவாசிய தேவைகளை அறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வருவது இல்லை பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்கே நடத்தப்படுகின்றன.

மேலும் படிக்க | பாதாள சாக்கடையால் அவதியுறும் பொதுமக்கள்... நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி!!

மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் மக்களின் தேவை அறிந்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுவதும் இல்லை .

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் இலவச பேருந்துகளில் ஏறும் பெண்களை உடன் பயணம் செய்யும் சக பயணிகளும் ஒரு சில நடத்துனர்களும் ஏளனம் செய்வதுடன் ஒரு சிலர் கோபத்தில் பெண்களை தாக்கும் அளவிற்கு வந்து விட்டனர். மாவட்ட நிர்வாகம் மக்களின் முக்கிய தேவைகளை உடனே  நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்க | சென்னையில் பேருந்துகள் தனியார் மயமாகிறதா...? அமைச்சர் அளித்த விளக்கம்...!