மர்மமான முறையில் வாலிபர் உயிரிழப்பு; மனைவியே கொலை செய்தாரா?

காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்து விட்டதாக புகாரளித்துள்ளனர்.

மர்மமான முறையில் வாலிபர் உயிரிழப்பு; மனைவியே கொலை செய்தாரா?

காஞ்சிபுரம் | அடுத்த பாலுசெட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இருங்காட்டுகோட்டியிலுள்ள ஓரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்று 3 வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பரிமளா பாலுசெட்டியிலுள்ள ஓரு தனியார் துணிக்கடையில் பணி புரிந்து வந்துள்ளார். பரிமளா வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாத அவரது கணவர் முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது சொல்பேச்சை கேட்காத மனைவியின் செயலால் முனியன் மன உலைச்சலில் அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 3 வது நாளாக தொடரும் ஊழியர்கள் போராட்டம்...! பசியால் தவிக்கும் விலங்குகள்..!

இந்த நிலையில் கடந்த 2 - ஆம் தேதி பரிமளா முனியன் வீட்டில் வைத்திருத்த 4000 ரூபாயில் 1000 ரூபாய் எடுத்து கொண்டு வேலைக்கு செல்லும் வழியில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சிறுணையிலிருந்து பாலுசெட்டி செல்லும் சாலையில் பரிமளாவை வழி மறித்து முனியன் வாக்குவாதத்தில் ஈடுபட, பரிமளா தான் வைத்திருந்த பிளைடால் முனியனின் கழுத்தை கிழித்துள்ளார். இதனையெடுத்து முனியன் அரசு மருத்துவமனையில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து பாலுசெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனது மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத முனியன் பரிமளா பணி புரியக்கூடிய துணிக்கடைக்கு சென்று சண்டையிட்டதால் பரிமளாவை பணியிலிருந்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா அன்று முதல் முனியனுடன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மனைவியின் சகோதரியை கொலை செய்த நபர்..! ஆயுள் தண்டனை குறைப்பு...!

இந்த நிலையில் இன்று பிற்பகல் குடித்துவிட்டு வந்த முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டதாக கூறப்படும் நிலையில், முனியனின் பெற்றோர் பணி முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முனியன் இறந்துவிட்டதாக பரிமளா தெரிவித்திருக்கிறார். இதனையெடுத்து முனியனின் இறப்பில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் எழுந்து பரிமளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து‌ போலீசாருக்கு தகவளிக்கப்பட்ட நிலையில் பரிமளா தப்பியோடியிருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி போலீசார் முனியனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கொலையான வாலிபருக்கு நியாயம் கேட்டு மனு...