“ செல்லாத நாணயமான பிஜேபியும், செல்லாத ரூபாய் நோட்டுகளான அதிமுகவும்...” திண்டுக்கல்.ஐ.லியோனி பேச்சு

“ செல்லாத நாணயமான பிஜேபியும், செல்லாத ரூபாய் நோட்டுகளான அதிமுகவும்...” திண்டுக்கல்.ஐ.லியோனி பேச்சு

திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக கட்சி சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல்.ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்,  “ செல்லாத நாணயமான பிஜேபியும், செல்லாத ரூபாய் நோட்டுகளான அதிமுகவும், திமுக என்ற ஆலமரத்தை எந்த காரணத்தினாலும் அசைக்க முடியாது. பெண்களின் ஆதரவு பெற்று அவர்களை சொந்தக் காலில் நிற்க வைத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவினரால் ஜெயலலிதா இறந்ததற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை, அந்த மர்மத்தையும் கண்டுபிடிக்கப் போவது எங்கள் தலைவர் ஸ்டாலின் தான், உங்களுடைய கட்சி மானத்தை காப்பாற்ற போகிறவர் எங்கள் தலைவர் தான். அவரைப் பார்த்து கையை நீட்டி குற்றம் சொல்வதற்கு எந்த யோக்கியதையும் இல்லை ” என்று பேசினார். இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ சந்திரசேகரன், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : “ அதிமுக- பாஜக உறவு என்பது  எலிக்கும் தவளைக்கும்  உள்ள உறவு ” - அமைச்சர் மனோ தங்கராஜ்