முருகன் கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் பஞ்சம்...

பழநி முருகன் கோயில் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகன் கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் பஞ்சம்...

காஞ்சிபுரத்தை சேர்ந்த நித்யா என்ற கர்ப்பிணி பெண் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். திடீரென மயக்கமடைந்த அவரை, மலைக்கோவில் மேல்பிரகாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ரயில் நிலைய மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கும் மருத்துவர்கள் இல்லாததால், அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் அத்து மீறல்...புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!