மாரடைப்பில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு துணை காவலர்..! ராணுவ மரியாதையுடன் அஞ்சலி..!

மாரடைப்பில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு துணை காவலர்..! ராணுவ மரியாதையுடன் அஞ்சலி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் டெல்லியில் ராணுவ தலைமை இடத்தில் தேசிய எல்லை பாதுகாப்பு துணை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாரடைப்பு காரணமாக  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் விமான மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ வாகனம் மூலமாக சொந்த ஊரான, திருக்கோவிலூர் பாரதியார் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது,

பின்னர் ராணுவ மரியாதை உடன் உறவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலை ராணுவ வாகனம் மூலம் ஊர்வலமாக எடுத்து வந்து திருக்கோவிலூர் தென்பண்ணை ஆற்றங்கரையில் உள்ள சுடுகாடு மைதானத்தில்
துணை தலைமை கமாண்டர் சஞ்சய்குமார் தலைமையில் ராணுவ மரியாதை உடன் 24 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் சீனிவாசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது திருக்கோவிலூர் காவலர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்,

இதையும் படிக்க : தமிழக அரசு பாஜகவுக்கு விசுவாசமாக உள்ளது - சீமான்