தென்திருப்பதியில் பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர் கூட்டம்!

தென்-திருப்பதி என்று அழைக்கபடும்  ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பதியில் பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர் கூட்டம்!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பிரம்மோத்சவ விழா, கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்ககூடிய மலைக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோத்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர்.

மேலும் படிக்க | திருப்பதி திருக்குடை ஊர்வலத்திற்கு 2000 காவலர்கள் பாதுகாப்பு!

இந்நிலையில் புரட்டாசி மாதம் 4 வாரத்தின் இரண்டாவது வாரம் சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமளுக்கு 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று.அதை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு  காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  சாமி  தரிசனம்  செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்தி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் அங்கு காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் புரிந்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள் தானிய பொருள்கள் போன்றவற்றை ஸ்ரீனிவாசபெருமாளுக்கு கணிக்கையாக வழங்குவார்கள்.இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர்!!!

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து  வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள்,கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 30 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | 2001 பொம்மைகள்... 108 சுமங்கலிகள் அர்ச்சனை... நவராத்திரி சிறப்பு பூஜை...