விழுப்புரம் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

விழுப்புரம் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு  கிராம சபை கூட்டத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், இக்கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தும் அக்குறைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும்  உறுதியளித்தனர்.