சிவராத்திரி நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சூரமாகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவராத்திரி நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கை | கோட்டையிருப்பு கிராமத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு சூரமாகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி நிறைவு விழா பக்தர்கள் புடைசூழ விமர்சையாக நடைபெற்றது. சுமார் 375 வருடம் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோயில் இக்கிராம மக்களின் காவல் தெய்வமாக உள்ளது.

கரந்தமலையிலிருந்து ஆற்றுவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அதன் பின்பு காேட்டையிருப்பு பெரிய கண்மாய் அருகில் அடைக்கலம் ஆனதாக கூறப்படும் சூரமாகாளி அம்மனுக்கு ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் மற்றும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். பொதுவாக சிவராத்திரி விழாவானது ஒவ்வொரு கிராமத்துக்களிலும் 10 முதல் 15 நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | கோலாகலமாக நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாணம்...

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சிவராத்திரி விழா கொண்டாடிய பிறகு பாரிவேட்டைக்கு சென்று வேட்டையாடி, பின் வீட்டிற்கு வந்து வேட்டையாடியவைகளை படையளிட்டு குலதெய்வ வழிபாடு நடத்துவது மரபு. இதே போன்று மற்ற சில பிரிவினர்கள் தங்களின் குலதெய்வ கோவில்களில் ஆடு கோழிகள் வெட்டப்பட்டு பூஜைகள் நடத்தி கொண்டாடுவது மரபு.

ஆனால் தற்பொழுது வேட்டையாடுவது தமிழக வனச் சட்டப்படி குற்றமென கருதுவதால் வேட்டையாடுவது கைவிடப்பட்டது. தற்பொழுது பல்வேறு கோவில்களிலும் ஆடுகள், கோழிகள் வெட்டப்பட்டு சிவராத்திரி பாரிவேட்டை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவராத்திரி நிறைவு நாளில் கோட்டையிருப்பு கிராமத்தார்கள் ஊர் மந்தையிலிருந்து அவரவர்கள் நேர்த்திக்கடனாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆடுகளுடன் சூரமா காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

மேலும் படிக்க | இந்திர விமானத்தில் சந்திரசேகர் சுவாமிவீதி உலா...

பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆடுகள் வெட்டப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டுவரப்பட்ட ஆடுகள் கோவிலில் வெட்டப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. வெட்டப்பட்ட ஆடுகளை பக்தர்கள் வீட்டிற்கு கொண்டு செல்வது கிடையாது. கோவில் பூசாரிகளிடம் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர்.

பின்பு பூசாரிகள் அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். சிவராத்திரி நிறைவு விழாவில் ஆடுகளை நேர்த்திகடனாக கொடுத்து கிராம மக்கள் அம்மனை வழிபாடு செய்து சென்றனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | 540 கிடாயுடன்... சீரும் சிறப்புமாக நடந்த சேர்மேன் வீட்டு கல்யாணம்...