தேங்காய் நார் கிடங்கில் திடீர் தீ விபத்து...

சூரமங்கலம் அருகே தேங்காய் நார் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஏராளமான தேங்காய் நார் எரிந்து சேதமடைந்தன.

தேங்காய் நார் கிடங்கில் திடீர் தீ விபத்து...

சேலம் | சூரமங்கலம் மூன்றாவது தர்மநகர் பகுதியில் சையத் என்பவர் பிரைட் காயர் என்ற பெயரில் தேங்காய் நார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய் நார்களை மொத்தமாக வாங்கி அதனை குடோனில் வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை குடோனில் இருந்து புகை வெளியே வரவே அருகில் இருந்தவர்கள் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். உரிமையாளர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | ஊழலுக்கு பலியானதா ஒன்றரை வயது குழந்தை....மெட்ரோ விபத்து.....காரணம் யார்?!!!

இதையடுத்து சம்பவ இடம் வந்த சூரமங்கலம் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேங்காய் நார் வைத்திருந்த குடோன் முழுவதும் தீயினால் சேதம் அடைந்தது. இதையடுத்து ஜேசிபி வாகன மூலம் குடோனை இடித்து தீயை மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் மூன்று வாகனங்கள் மூலம் தீயை அனைத்து  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில்  சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சேதமானது. சம்பந்தப்பட்ட குடோனுக்கு மின் இணைப்பு ஏதும் இல்லாத நிலையில் தீ எப்படி பரவியது என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க | தலையில் கரும்பு கட்டு விழுந்த விபத்தில் தொழிலாளி பலி ...