சென்னை: வேலைவாய்ப்பு முகாமில் 1000 பேருக்கு பணி நியமன ஆணை!

சென்னை: வேலைவாய்ப்பு முகாமில் 1000 பேருக்கு பணி நியமன ஆணை!

சென்னை: கே கே நகரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கேகே நகரில்,  உள்ள கலைஞர் நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 100_வது பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் டெக் மகேந்திரா அசோக் லேலண்ட் டிவிஎஸ் சதர்லேண்ட் அப்பல்லோ டயர்ஸ் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

முன்னதாக நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ் மற்றும் 136_வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிலவரசி துரைராஜ் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற முகாமை சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2300க்கும் அதிகமான மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.முகாமில் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர்ராஜா பெருநகர சென்னை மாநகராட்சி கணக்கு குழு தலைவர் க.தனசேகரன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினர்